Vaana Pitha Thantha Vedhathilae – வான பிதா தந்த வேதத்திலே

1. வான பிதா தந்த வேதத்திலே
நானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன்
விவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்
பல்லவி
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார் நேசிக்கிறார்
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறா ரென்னையும்
2. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்
மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன்
சாவு மரத்திலந் நேசங் கண்டேன்
நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம்
3. கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்?
இயேசுவுக்கு மகிமை நானறிவேன்
தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார்
எப்போதும் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம்
4. இயேசு ராஜாவை நான் காணும்போது
நேசமா யிக்கீதம் பாடிடுவேன்
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்
என்றுபாடி நித்தியம் நான் மகிழ்வேன் – ஆனந்தம்
5. நிச்சய மிதினில் யான் மகிழ்வேன்
அட்சயன் இயேசுவைப் பற்றிக்கொள்வேன்
பாட்டாய் இந் நேசத்தைப் பாடிடுவேன்
கேட்டவுடன் சாத்தான் ஓடிடுவான் – ஆனந்தம்

Leave a Comment