Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா

பல்லவி
வாருமையா சுவாமி வாருமையா – இப்போ
தேவ ஆவியை ஊற்ற வாருமையா!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா
2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா
3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா
4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! – வாருமையா

Leave a Comment