Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

பல்லவி
ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்.
அனுபல்லவி
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே
சரணங்கள்
1. மேசியாவென்றுரைத்து, யூத‌
ராஜனென்றே நகைத்து,
தூஷணித்தே அடித்து, நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி,
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே
2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்
பேதுரு மறுதலிக்க‌,
சூதா யெரோதே மெய்க்க, வெகு
தீதாயுடை தரிக்க‌,
நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே
3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்ட மலையெடுத்து
ஈண்டல்[1] பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து,
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே

Leave a Comment