உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe


உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
தேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்
மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோ
வெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது
ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது

உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களே
பூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரே
உலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோ
கர்த்தரின் ஜனமே பயப்படாதே

மனம் பொருந்தி இயேசுவுக்கு
செவியை சாய்ப்போம்
தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம்
ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்
கொடிய கொள்ளை நோய்களை
விரட்டி அடிப்போமே

Leave a Comment