உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை
வரைந்து கொண்டீரே
வெறும் மண்ணான என்னை
தேடி வந்தீரே

என் தூசி நீங்க தட்டி
என் காயம் எல்லாம் கட்டி
உங்க அன்பின் கரத்தினால்
என்னை கட்டி அணைத்தீரே

இயேசுவே உங்க முகத்தை பார்த்து
இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து
இயேசுவே உங்க தோளில் ஏறி
உரிமையாய் பேசுவேன் – 2

1.நீர் சொன்ன வார்த்தைகள்
ஒன்றுமே மாறாது
காலதாமதம் என்றாலும்
கலங்கி நான் போவேனோ

2.எனக்கொரு பந்தியை
தருவேன் என்றிரே
லாபம், நஷ்டமோ என்றாலும்
பின்தொடர்வேனே நான்

3.தாய் என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பேனோ
உறவுகள் வெறுத்தாலும்
உமதன்புக்கு இணையில்லயே

இயேசுவே உங்க முகத்தை பார்த்து | Yesuve Unga Mugathai Paarthu

Leave a Comment