எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

பல்லவி

எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்

அனுபல்லவி

இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந்

சரணங்கள்

1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்,
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,
கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந்

2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்வசத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – எந்நாளுந்

3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதான உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றிளார் ஜாதிக ளேநீர், – எந்நாளுந்

4. விந்தைப்பி தாவர்க்கும்-ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்ததமென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி. – எந்நாளுந்

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

 

Leave a Comment