ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
உம்மை விட்ட எனக்கு யாரப்பா
இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா

உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா- 2
முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை

ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2
சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2

கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
(ஏழை)

Leave a Comment