தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியே
துணையார் நீர் வருவீர்
இறை வல்லமையும் இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2)

வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

பகைமையை நான் அழிக்க
நல் அன்பைத் தாருமே
மன்னிப்பில் தினம் வளர
நல்ல மனதினைத் தாருமே
நீதி நேர்மை உண்மை வழியில்
நடத்திட வாருமே(2)
வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)


அமைதியில் நான் வாழ
உம் கனிகளால் நிரப்புமே
மகிழ்வுடன் பணி செய்ய
உமது ஆற்றலைத் தாருமே
வாழும்போதும் வீழும்போதும்
தாங்கிட வாருமே(2)
வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

தூய ஆவியே
துணையார் நீர் வருவீர்
இறை வல்லமையும் இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2)

வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

Leave a Comment