பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics

பனிப் பூக்கள் பறக்கின்ற
விண்மீன்கள் வானில் ஜொலித்தன
இடையர்கள் இசை அமைத்திட
வான தூதர்கள் பாட்டு பாடிட

நம் இயேசு பிறந்தாரே
தாவீதின் ஊரினிலே
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்

அன்பை நமக்கு தந்திட
கந்தை துணியை ஏற்றவர்
சமாதானத்தை உலகிற்கு அளித்திட
புல்லணையில் கிடந்ததே அடையாளம்
நம் பாவம் போக்கவே
விடியலாய் அவதரித்தார்

உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்

மூவர் பரிசுகள் உமக்காக
நீரே எமது பரிசாக
தேவன் தந்த கொடையாக
எங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாக
உம அன்பை பிறருக்கு
சொல்லிட அருள் தரும்

உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்

பனிப் பூக்கள் பறக்கின்ற
விண்மீன்கள் வானில் ஜொலித்தன
இடையர்கள் இசை அமைத்திட
வான தூதர்கள் பாட்டு பாடிட

நம் இயேசு பிறந்தாரே
தாவீதின் ஊரினிலே
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்

Leave a Comment