மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்
துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..
மண்ணுலகை மீட்க
என்னையும் இரட்சிக்க
தேவகுமாரனாய் பிறந்தார்
இயேசு தேவ குமாரனாய் பிறந்தார்

அவரே உன்னதர்
சமாதான காரணர்
மகிமை உடையவர் -2

1.பாவம் அறியாத தேவ குமாரனே
பாவி எனக்காக பிறந்திட்டாரே
உலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்
மனித வாழ்க்கையும் ஒளியானதே

2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவே
ஏழ்மைக் கோலமாக வந்திட்டாரே
என்னிடம் நேசம் காட்டிடவே
நேச குமாரன் பிறந்திட்டாரே

Leave a Comment