அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்
துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே
பல்லவி
நேசிக்கிறேன் நானும்மை
நேசித்து சேவிப்பேன்!
தாசனென் யாவையுமே
தாறேன் மீட்பா!
2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன்
உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்!
3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்!
நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

Leave a Comment