அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே
பல்லவி
அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும்
திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!
சரணங்கள்
1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை
திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை
திருவழியில் – அவரருளொளியில் – தினம்
தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல்
2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி
தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி
தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன்
தேசிகரும் அவரே! – அண்ணல்
3. உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு
ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி
புரிவாரோ – இரட்சை – அவர் நேரே – திவ்விய
குருவாயுதித்தவரே – அண்ணல்
4. பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு
தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு
தவறாதே – மனம் – பதறாதே – நல்ல
தருணமிதை விடாதே – அண்ணல்

Leave a Comment