அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா
உம் பாதம் சேர வந்தேன்-2
ஏகமாய் வழிவிலகி சென்றேன்
அதிகமாய் பாவம் செய்தேன்-2

மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2
(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்
பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2

1.நிற்பதே உமது கிருபை
நான் வாழ்வது உமது பார்வை-2
எனக்கு முன் உமது பாதை
அறிவேனே அதுவே நீதி-2
(என்னை) நடத்தி சென்றிடுமே
நான் நம்பும் தெய்வம் நீரே-2

2.என் உதடு உம் நாமம் பாடும்
என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2
தொடர்ந்து ஓடிடுவேன்
உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

Leave a Comment