அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன்

பல்லவி

அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள் பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே

சரணங்கள்

1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம்

2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம்

3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே
ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவே
பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம்

4. செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே
இல்லாவிடில் நான் வெறுமையே – என் இயேசுவே
எல்லாம் உம்மால் கூடும் உண்மையே – அருணோதயம்

5. வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்
மனமிரங்கித் தாருமேசையா – என் இயேசுவே
தினமுமென்னைக் காருமேசையா – அருணோதயம்

6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் – என் தேவனே
அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன் – அருணோதயம்

அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள்பரனே கேளுமே
ஆவிவரந்தாருமே – என் யேசுவே

1. கருணையுடன் கடந்தராவில்
காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் யேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்

2. இந்தநாளைக் காணச் செய்தீர்
இரக்கமுள்ள தெய்வமே
இதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் – என் யேசுவே
இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்

3. கதிரவன் எழும்பிவரும்
முறையின்படியே என்மேல்
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் யேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும்

4. பகலில் வரும் மோசமொன்றும்
தமியன்மேல் விழாமலே
பாதுகாக்க வேணும் தெய்வமே – என் யேசுவே
சூதுவாது போக்கும் தெய்வமே

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

Leave a Comment