Tamil catholic song

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae

பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.கானமழை வானமதில் மேகம் சூழவேவானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவேவணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே 1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிதுஇயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது. 2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிதுஞாலமதில் ஞானமகன் வந்த நாளிதுஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுதுஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது. தேகமது சோகமதை வென்ற நாளிதுஅடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சுநியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க Happy Happy Christmas Merry Merry ChristmasHappy Happy Christmas Merry Merry Christmas-2 1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை – லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu Read More »

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum

காலம் முழுதும் எனை காக்ககரங்கள் பிடித்து வழி நடத்தஎனக்காக பிறந்தவரேஎந்தன் வாழ்வில் நீ புது உறவேமானுடத்தின் மகுடமாய்மனித நேயத்தின் மன்னவனாய்இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனேஉன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமேஉன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தைஎந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமேஆரிராரிராரோ ஆரிராரிராரோஆரிராரிராரோ ஆரிராரிராரோ. 1 சிதைந்த வாழ்வை நேரிய வாழ்வாய் மாற்றஉடைந்த மனதை புது உறவில் உருவாக்கஉயிராய் பிறந்த பாலகனே உறவாய் மலர்ந்த மன்னவனே – 2வாடிப் போகும் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்கபுதிய பாதையில் மனித

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Read More »

ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan parulaga nathan

ராஜாதி ராஜன் பாருலக நாதன் பிறந்த ஒரு ராத்திரிதூதர்கள் கூட்டம் ஆனந்த கானம் விண்ணில் உயர்த்திடும் ராத்திரிஆம்பல் பூவிதழ் மெத்தை விரித்திடும் இடையர் சங்கீத ராத்திரிபனியின் துளி கனம் நெற்றியில் ஏந்திய தும்பைப்பூவிதழ் விரியும் ராத்திரிவிழி இமைகள் விடிகையில் சாய்ந்துறங்கும் ராத்திரிபெத்லகேமிலே ராக்கிளிகள் தூது போகுமோர் ராத்திரிசாந்தமாய் ராத்திரி வெண்ணிலா உருகும் ராத்திரி. 1. பிள்ளையின் கொஞ்சலாம் மழலையை கேட்டொத்து கூவிய ராக்குயில் கூட்டத்தாரேபனிப்போர்வை மறைவினில் மயங்கி அணைக்க பள்ளத்தாக்கில் வரும் நிலாவேவால் தொட்டு மையிடும் அந்த

ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan parulaga nathan Read More »

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2. 2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலேவலிதந்த மனுஷனை

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Read More »

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்…. மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலேசொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரிசிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்ஆத்மாவின் பலிபீடத்தில். 1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்துமாட்டுத்தொழுவம்

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil Read More »

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன்

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Exit mobile version