என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்

என் அன்பே ஆருயிரே – என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே

நான் உம்மை அறியவில்லை
நீர் என்னை அறிந்தீரே – இந்த
சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே

தகுதியற்ற என்னை கண்டீர்
கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
உந்தன் சித்தம் செய்ய
அபிஷேகம் அருளினீர்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கிறேன் – என் அன்பே

Leave a Comment