Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்

பல்லவி

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை

Leave a Comment