NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

Leave a Comment