Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

Leave a Comment