பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai

1. பாடிட வாரும் தேவனை
அன்-ப-வர்!
வானம் புவியும் பாடட்டும்
அன்-ப-வர்!
ஆத்மா விழித்தெழும்பட்டும்
உள்ளங்கனிந்து பாடட்டும்
இயேசுவுக்காய் பாடிடுவோம்
அன்-ப-வர்!

2. பூலோகமெங்கும் கூறுவீர்
அன்-ப-வர்!
மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்
அன்-ப-வர்!
இரத்தம் நம் பாவம் போக்கிற்றே
ஆவி நம் இருள் நீக்கிற்றே
இப்போ நாம் களிகூருவோம்
அன்-ப-வர்!

3. இங்கே நம் பங்கு ஆனந்தம்
அன்-ப-வர்!
தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்
அன்-ப-வர்!
நம் சூரியன் கேடகமும்
நம்பிக்கை பெலன் துணையும்
பாதைக்கு வழிகாட்டியும்
அன்-ப-வர்!

4. யார் நம்மை கைவிட்டால் என்ன?
அன்-ப-வர்!
கிறிஸ்துவால் வெற்றியடைவோம்
அன்-ப-வர்!
யோர்தான் பெருகினும் அஞ்சோம்
இயேசு நம்மோடங்கேயுண்டு
தாங்கியே தூக்கிச் செல்வாரே
அன்-ப-வர்!

5. கானானில் மீண்டும் பாடுவோம்
அன்-ப-வர்!
பேரொலி இது தானங்கு
அன்-ப-வர்!
காலங்கள் இங்கே சுழலும்
வான சேனையோடு சேர்வோம்
அப்போதும் நம் பாட்டிதுவே
அன்-ப-வர்!

Leave a Comment