Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்
சுவாமி சரணம் சரணம் சரணம்
இயேசு நாதனே சரணம்
இம்மானுவேலனே சரணம்
இன்னிசை தந்தவா சரணம்
இம்மையில் வந்தவா சரணம் – சரணம்

பெத்தலயிலே பிறந்து
எருசலேயிலே வளர்ந்து
இன்னுயிர் குருசில் துறந்து
என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம்

அடிக்கபட்ட ஓர் ஆடு போல்
பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல்
எத்தனை எத்தனை பாடுகள்
அத்தனை துயரம் எதற்காக
அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Leave a Comment