Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

பல்லவி
சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையா
சேனையிலே வீரராக
சரணங்கள்
கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;
கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;
கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,
தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,
சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,
சுட்டி விரியன், சித்திரைக்காலி,
சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,
பொட்டல் விளையும் புழுதி புரட்டி,
புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,
குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,
குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்
கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பா
கல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,
வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,
வீரியடங்கான், வாசிறமிண்டான்;
குட்டநாடுமயில், குலமறியன்சார,
கோடனாரியன் முட்டகன் செந்நெல்,
கட்டி வெள்ளைப் பூதகாளி கருப்பன்,
காடன், வயல் தூவ கண்ணன் ஞாவுரா,
திட்டமுடன் அரிக்கிராவி, முதலான நெல்லுகள்
தென்னிந்தியாவெங்கும் சீராய் விளைந்து
பட்சமுடன் இரட்சணிய சேனையார் வந்து
கூடவும், பாடவும், தேவனைப் போற்றவும் – சேர்

Leave a Comment