Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே
உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன்

பலனில்லாமல் இருந்தேன்
பயன்படாமல் வாழ்ந்தேன்
அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே

1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன்
என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன்
உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா

2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே
கடும் வாதையின் நேரத்திலும் என்னை காத்து கொண்டவரே
இன்னும் உம்மை நம்பிடுவேன் என் வாழ் நாள் முழுவதுமே
என் வாழ்நாள் முழுவதுமே உம்மை நம்பிடுவேன்

Leave a Comment