தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா-2
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே-தாயின்

1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்

2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

Leave a Comment