ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

PADAITHAVAREY | படைத்தவரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அகிலம் படைத்து ஆள்பவரே – 2

உம்மை அல்லேலூயா
சொல்லி பாடிடுவேன்
படைத்தவரே உம்மை
துதித்திடுவேன்- 2

வானம் பூமி படைத்த தேவன்
நிலைப்படுத்தி துவக்கினீரே -2
வார்த்தையாலே நீர் நிலங்கள்
இருளில் வெளிச்சம் படைத்தவரே
– உம்மை அல்லேலூயா

உந்தன் சாயல் கொண்டு படைத்த
சித்தம் கொண்ட சிருஷ்டிகரே
மண்ணை பிசைந்து உம்
சுவாசம் தந்து
ஆண்டு சுகிக்க வைத்தவரே -2
– உம்மை அல்லேலூயா

படைத்த உம்மை எந்நாளும் மறந்து
படைப்பின் பின்னே ஓடுகின்றோம்
ஆனாலும் தயவாய் ஏற்றுக்கொண்டு
புத்திர சுவிகாரம் தருபவரே -2
– உம்மை அல்லேலூயா

Leave a Comment