எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்-4
இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
என்றும் செய்பவர்-எனக்காக

1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக

2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

Leave a Comment