புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டி
நடனமாடியே மகிழ்ந்திடுவேன்
அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாளும் – 2
அல்லேலூயா அவர் கீதம் – 2

1.தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையைப் போல் போஷித்தாரே – 2
(என்றும்) தேவ அன்பால்
நிறைந்து நானும்
தேவாதி தேவனைத்
துதித்திடுவேன் – அற்புதமே

2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
(தூய) எண்ணெய் ஊற்றி
என்னை மாற்று
புதிதான அபிஷேகம்
தந்திட்டாரே – அற்புதமே

3.சீக்கிரமாய் வந்திடுவார்
கண்டிடுவேன் நான் களித்திடுவேன்
(அவர்) நேச மார்பில் சாய்ந்து என்றும்
ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்

Leave a Comment