மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2

1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள்

2.என் ஆவி என்னில் தியங்கி போனதே
என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
நீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

Leave a Comment