முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே

வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2)

2. இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்

3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்
இன்பங்கள் எமக்கீந்திடுவார்

Leave a Comment