Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது

எனை நினைத்து உருகியது
போதும் இயேசுவே
எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே
கல்வாரி மலையின் மீது
பட்ட துன்பங்கள்
இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே
உமக்கென்று நான் வாழ்ந்திட
உம்மையே நான் சேவிப்பேன்
– எனை நினைத்து

என்னுயிர் உள்ள நாள் முழுதும்
உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
மரணம் உம்மை சூழும் போதிலும்
மறவாமல் என்னை
நினைத்துக் கொண்டீரே
– எனை நினைத்து

உமக்கென்று நான் வாழ்ந்திடவே
உம்மையே நான் சேவிப்பேன்
என்னையும் உந்தன் மார்போடு
அணைத்து கொண்ட என் இயேசுவே-2
– எனை நினைத்து

Leave a Comment