IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

இமைப்பொழுதும் என்னை நடத்தி
இந்த பொழுதும் என்னை உயர்த்தி (2)
நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரே
உந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)
இமைப்பொழுதுமே என்னை நடத்தினீரே
என்னை உறங்காமல் தூங்காமல் காத்திரே (2)
நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரே
உந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)

1. குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கியே என்னை நடத்தினீரே
கவலைகளை உம்மிடத்தில் தந்துவிட்டேன்
என்னை மகிழச் செய்தீர்
என்னை மீட்க உமமை தந்துவிட்டீர்
எந்தன் பாவம் நீக்கிடவே
இந்த உலகின் மீது எவ்வளவு அன்புக் கூர்ந்தீர்
இயேசுவை எனக்காக தந்து விட்டீர் – நாதன் திருக்கரம்

2. உம்மிடத்தில் நான் மறைந்திருந்தேன் ஆனால்
உம் நினைவோ என்னை மறக்கவில்லை
உம்மை விட்டு நான் பிரிந்திருந்தேன் உம்
நேசக்கரம் என்னை அணைத்திட்டதே
உம் கரத்தால் என்னை படைத்தீரே அந்த
கரத்தை ஆணியால் அறைந்து விட்டேன்
என்னை தூற்றும் மனிதர்கள் மத்தியிலே என்னை
உயர்வாக வைத்தீரே நன்றி சொல்வேன் – நாதன் திருக்கரம்

Leave a Comment