Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

கர்த்தரே பெரியவர் அவர்
ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
விவரித்துச் சொல்லுங்களேன்

கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் – அவர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வல்லமை மிகுந்தவர்

கர்த்தர் நல்லவர்
நன்மையானதைச் செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம்

Leave a Comment