இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,
இராஜ பலத்தால் போர் புரிந்தால்;
அன்பின் தேவாவியின் பட்டயம்
சேர்க்கும் பாவியை இயேசுவிடம்!

பல்லவி

நம்புவேன் ஜெயிப்போம்!
இராஜ பலத்தால் போர் புரிந்தால்

2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!
எங்கும் எதிரியின் கூட்டமே
நாம் முடியுமட்டும் போர் செய்வோம்!
ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன்

3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,
வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்
இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,
அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன்

4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;
தேவ நாமத்தில் போர் புரிவோம்;
லோகம் பேயை முற்றும் ஜெயிப்போம்
மீட்பருக்காய் நாம் போர் புரிவோம்! – நம்புவேன்

5. இரட்சண்ய சேனையில் உண்மையாய்
இரட்சகர் நாமத்தில் போர் செய்வோம்
இரத்தம் அக்கினியால் வெல்லுவோம்
அத்தன் பாதம் சேர்ப்போம் இத்தரை – நம்வுவேன்

Leave a Comment