Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம்

1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்
சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே.

4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் – பார்த்தல்
ஒப்பே தருங்காவலே உன்னருளுக்குத் தரும் புகழ் துதி, துதியே

5. மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே

Leave a Comment