எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர — எங்கே
5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் — எங்கே
6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ — எங்கே
7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து — எங்கே
- வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele
- Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics
- Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்
- கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh
- மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR
எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer