எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

சரணங்கள்

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர — எங்கே

5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் — எங்கே

6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ — எங்கே

7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து — எங்கே

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

Leave a Comment