பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal

பாதையில் பல கனவுகள்
இளமையின் இனிய ஏக்கங்கள்
பருவத்தின் எதிர் பார்ப்புகள்
நினைவுகள் நிகழுமா
கானலாய் போன கனவுகள்
ஏக்கத்தின் தீய நோக்கங்கள்
பருவத்தின் மாய சூழ்ச்சிகள்
ஏன் இந்த வாழ்க்கை

வாழ்வின் பாதை நீ அறிவாயா
வல்லவர்க்குன்னை நீ தருவாய்

வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்
வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்
உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலே
திரும்பி பார் இயேசுவை

கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள்
மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்
நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிட
திரும்பி பார் இயேசுவை

Leave a Comment