தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் -2

குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2
குறைவொன்றும் எனக்கில்லையே.

அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2
நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2
துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

Leave a Comment