மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே – 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் – 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று – 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே – 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே – 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே – 2
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே – 2

Leave a Comment