யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும்
நான் உம்மை நம்பிடுவேன்
யார் விட்டு சென்றாலும்
நான் உம்மை பின் தொடர்வேன்-2

மனிதர்க்கு முன்பாக
உம்மை நம்பும் ஒருவரையும்
நீர் ஒருநாளும்
வெட்கப்பட விடமாட்டீர்-2

மனிதர்க்கு முன்பாக
நான் உம்மை நம்பிடுவேன்
அந்த மனிதர்க்கு முன்பாக
என் தலையை உயர்த்திடுவீர்-2

யோபுவின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே
யோசேப்பின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே-2

அந்த கண்கள் முன்பாக
மீண்டும் தூக்கி நிறுத்தினீரே
வெட்கப்பட்ட மனிதர் முன்னே
மேன்மைப்படுத்தினீரே-2
உம்மை நம்பும் மனிதர்கள்
அழிந்து போவதில்லை-மனிதர்கள்

யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

Leave a Comment