Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர்-2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா?-2-அணைத்திடும்

 

Leave a Comment