அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே

அழைத்தீரே ஏசுவே
Azhaitheerae Yesuvae
அன்போடே என்னை அழைத்தீரே
Anbodae Ennai Azhaitheerae
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
Aanndavar sevaiyilae marippaenae
ஆயத்தமானேன் தேவே
Aayaththamaanaen Devae

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
1. En janam paavaththil maalkirathae
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
En uyir thanthaen mannuyirkkae
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
En thuyarathoniyo ithaiyaar intu kaetpaaro
என் காரியமாக யாரை அழைப்பேன்
En kaariyamaaka yaarai alaippaen
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே
Enteerae vanthaenitho — Azhaitheerae

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
2. Ennathaan theengu naan ilaiththaen
என்னை விட்டோடும் என் ஜனமே
Ennai vittodum en janamae
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
Eththanai nanmaikalo unakkaaka naan seythaenallo

2. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
2. Aadamparangal maettimaikal
ஆசாபாசங்கள் பெருகிடுதே
Aasaapaasangal perukiduthae
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
Aayiram aayiramae naraka valipokintarae
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
Aa! neeraeyallaamal yaarunndu meetka
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே
Aanndavarae irangum — Azhaitheerae

3. பாக்கியமான சேவையிதே
3. Paakkiyamaana sevaiyithae
பாதம் பணிந்தே செய்திடுவேன்
Paatham panninthae seythiduvaen
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
Aayul mutiyum varai kiristhaesu varukai varai
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
Anpin manaththaalmai unnmaiyum kaaththu
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே
Aanndavarai ataivaen — Azhaitheerae

Leave a Comment