Tamil catholic song

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என் […]

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல Read More »

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்

நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம் புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம் இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும்

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள் Read More »

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள்

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Read More »

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு ஆராரிராரோ ஆராரிராரோ அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் ஆராரிராரோ ஆராரிராரோ தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்துவிண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் Read More »

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள்

சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம்

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள் Read More »