Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

மறவாமல் நொடியும் விலகிடாமல்
என் கரங்கள் பற்றிக்கொண்டீரே
மறவாமல் நொடியும் விலகிடாமல்
மார்போடு அணைத்துக் கொண்டீரே

நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்து
நிலையில்லா உலகினை என் கண் தேட
உலகின் மாயைகள் எனை வந்து நெருக்க
அலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற

எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2

1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்க
அற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே
அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை
அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே

உடைந்த உள்ளம் உம்மிடத்தில் தந்தேன்
உருமாற்றி என்னை உயர்த்தி வைத்தீர்
ஏதுமில்லை என்று கைவிரித்து நின்றேன்
எல்லாம் நீரே என உணரச்செய்தீர்

எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2

மறவாமல் நொடியும் விலகிடாமல்
மார்போடு அணைத்துக் கொண்டீரே

Leave a Comment