பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae

பாடல் 16
பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளையது
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற நேரமது – ஓ.
1.வானிலே ஓஹோஹோ வானிலே
தூதர்கள் பாடல் பாடிட
மனிதரின் பயம் போக்க பிறந்தவரை
மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே
2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே
மீனொன்றுவால் நீட்டி சென்றிட
மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை
சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
3. முதலாம் வருகை அறியா
எத்தனை மானிடர் உண்டிங்கு
இரண்டாம் வருகையில் வரப்போகும்
இயேசுவை சந்திக்க ஆயத்தமா..

Leave a Comment