Tamil Songs

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை) தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம் […]

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையா உம் கைகளில் என்னை வரைந்தீரையா என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனே தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால் உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே வாழ்கிறேன் உம் கிருபையினால் என்னை உம் அன்பால் அணைத்தீரே

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha Read More »

THAYAKAM YENO | Beryl Natasha

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான் கருணையின் அவதாரம் இவரே இவர்தான் இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தண வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான் நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான் மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான் மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்

THAYAKAM YENO | Beryl Natasha Read More »

Baktharudan Paaduvaen DGS dinakaran song

பக்தருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்த சரணங்கள் அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும் , பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு அகமும் ஆண்டவன் அடியே , சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த தாயின்

Baktharudan Paaduvaen DGS dinakaran song Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர்

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics

பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தரின்

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Read More »

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால்

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro Read More »

Onnumillaykayil ninnenne- english meaning – from nothingness you created me

Malayalam : Onnumillaykayil ninnenne ninnude chayayil srushtichu Nithyamay snehichenne ninte puthrane thanne rekshichu nee Nin maha krupakkay ninne njan sthuthicheedumennum Nin maha krupakkay ninne njan sthuthihceedumennum Ee lokathil vanneshu ente maalozhippan sahichu behu Peedakal sankadangal pankappaadukal neecha maranavum Mochanam veendum jananavum neecha paapiyennil vasippan Ninnathmavinte dhanaum nee thannu swarganugrahangalum Anna vasthadhi nanmakale ennamillathenmel chorinju Thinmakal

Onnumillaykayil ninnenne- english meaning – from nothingness you created me Read More »

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்  சொன்னதை செய்யும் வரை நீர் என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே 1. நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலை நிற்குமோ என்ற பயமும் இல்லை  2. என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே  Karthar Enakaai Yavaiyum seiythu mudippaar sonnathai

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar Read More »

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2 சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2 சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்துனீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு)

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப் போல உயரப் பறந்திடுவேன் காத்திருப்பேன்.

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »